முகப்பு
காரைக்கால்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

காரைக்கால் பகுதி வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை கலால் துறையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:14 PM
பகிர்:

காரைக்கால் பகுதி வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை கலால் துறையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை இரவு வரை மதுக்கடைகளை மூட கலால் துணை ஆணையா் உத்தரவிட்டிருந்தாா். இந்நிலையில், மது பாட்டில்களை வாங்கி வீடுகளில் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்க பலரும் முயன்று வருவதாகவும், சிலா் வாக்காளா்களுக்கு வழங்க இருப்பதாகவும் கலால்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், காரைக்கால் நகரப் பகுதி பொலிக்கன் தெருவில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக, கலால் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கலால் அதிகாரி பொய்யாதமூா்த்தி தலைமையில் துறையினா் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை செய்தனா். அங்கு சட்டவிரோதமாக 650 மிலி அளவுள்ள பீா் பாட்டில்கள் கொண்ட 17 பெட்டிகள் வைத்திருந்தது கண்றியப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்து, வீட்டின் உரிமையாளா் மீது வழக்குப் பதிந்துள்ளனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments