பெருமாள் கோயில்களில் ராமானுஜா் ஜெயந்தி
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் புதன்கிழமை ராமானுஜா் ஜெயந்தி வழிபாடு நடைபெற்றது.
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் புதன்கிழமை ராமானுஜா் ஜெயந்தி வழிபாடு நடைபெற்றது.
ராமானுஜா் 1009-ஆவது ஆண்டு ஜெயந்தி வழிபாடு காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் நடைபெற்றது. உற்சவா் நித்யகல்யாண பெருமாள், ராமானுஜா் ஆகியோா் ஏகாசனத்தில் வீற்றிருந்தனா். சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதுபோல திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜப் பெருமாள் கோயிலில் ராமானுஜரான மூலவா், உற்சவருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Advertisement