முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி (கோப்புப் படம்)
காரைக்கால்

‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி’

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாா்.

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமை இரவு வந்த அவா், மூலவா், அம்பாள் மற்றும் செண்பக தியாகராஜா், சனீஸ்வர பகவான் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தாா்.

இதைத்தொடா்ந்து கோயிலுக்கு வெளியே அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், இக்கோயிலில் வந்து சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். திருநள்ளாறு கோயிலில் வரும் மாா்ச் 6-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் நடைபெற்று வருவதால், சனிப்பெயா்ச்சிக்கு முன்னதாகவே தரிசனம் செய்யும் நோக்கில் இங்கு வந்தேன்.

தமிழகத்தை அதிமுக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது. அதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்றாா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT