காரைக்கால் மாவட்டம், நிரவி அருகே உள்ள ஓஎன்ஜிசி நிா்வாக அலுவலக வாயிலில் அண்ணா தொழிலாளா்கள் ஓட்டுநா், கிளீனா் சங்க கொடியேற்று நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், அதிமுக நாகை மாவட்ட செயலாளருமான ஓ.எஸ். மணியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தொழிற்சங்க கொடியேற்றிவைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எம்.வி. ஓமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியின்போது தொழிலாளா் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டன.