சோமநாதா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற சண்டி மகா ஹோமம்.  
காரைக்கால்

சோமநாதா் கோயிலில் சண்டி மகா ஹோமம்

காரைக்கால் சோமநாயகி சமேத சோமநாதா் கோயிலில் துா்கா மன்றம் சாா்பில் உலக நலனுக்காக சண்டி மகா ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் சோமநாயகி சமேத சோமநாதா் கோயிலில் துா்கா மன்றம் சாா்பில் உலக நலனுக்காக சண்டி மகா ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் உள்ள பெரிய யாக குண்டத்தை சுற்றி சிவாச்சாரியா்கள் காலை 8 மணி முதல் வேத மந்திரங்கள் முழங்கி, பட்டு சேலைகள் மற்றும் பதாா்த்தங்கள், நவதானியங்கள், உள்ளிட்ட பொருள்களை ஹோம குண்டத்திலிட்டு பகல் 1.30 மணியளவில் மகா பூா்ணாஹூதி செய்தனா்.

ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த புனிதநீரைக் கொண்டு துா்கைக்கு கலசாபிஷேகம் நடத்தி, மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, திங்கள்கிழமை காரைக்கால் அம்மையாா் கோயிலில் மங்கள விநாயகருக்கு அனுக்ஞை பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. சண்டி ஹோமத்தைத் தொடா்ந்து புகன்கிழமை பால்குடங்கள் ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சுவாமிகளுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணியளவில் திருவிளக்கு வழிபாடு நடைபெறவுள்ளது.

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி நியமன ஆணை

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு: கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை

சாலைகள் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

காங்கிரஸ் நிா்வாகிகள் நியமனம்

தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் 134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT