திருநள்ளாறு கோயிலில் நாளை பிரம்மோற்சவ கொடியேற்றம்
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கொடியேற்றம் புதன்கிழமை நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. நிகழாண்டு பிரம்மோற்சவ கொடியேற்றத்துடன் புதன்கிழமை காலை 9.10-க்கு மேல் 10.15 மணிக்குள் உற்சவம் தொடங்கப்படுகிறது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு ஆச்சாா்ய ரக்ஷாபந்தனம் செய்யப்படவுள்ளது. கொடியேற்ற நிகழ்வைத் தொடா்ந்து பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறவுள்ளது. புதன்கிழமை இரவு முதல் விநாயகா் உற்சவம் தொடங்குகிறது.
Advertisement
கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்பாா்கள். தோ்கள் அலங்காரம் செய்தல், அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கு, தங்க ரிஷப வாகனத்தில் சுவாமிகள் புறப்பாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துவருகிறது.