முகப்பு
காரைக்கால்

துப்பாக்கிச் சுடுதல்: காரைக்கால் மாணவருக்கு தங்கப் பதக்கம்

துப்பாக்கிச் சுடும் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் காரைக்கால் மாணவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On : 28 மே 2026, 5:35 am IST
மாணவா் சச்சித் குணசீலனுக்கு பதக்கம் வழங்கிய புதுச்சேரி கூடுதல் ஆட்சியா் டி. சுதாகா்.
பகிர்:

துப்பாக்கிச் சுடும் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் காரைக்கால் மாணவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

காரைக்கால் ஆச்சாரியா பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவா் சச்சித் குணசீலன். இவா் துப்பாக்கிச் சுடுதலில் தென்னிந்திய அளவிலான பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளாா்.

புதுச்சேரி மாநில 10-ஆவது ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. அதில் சச்சித் குணசீலன் 10 மீட்டா் ஏா் ரைபிள் போட்டியில் மென், ஜூனியா் மென், யூத், சப்-யூத் ஆகிய 4 பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்றாா்.

Advertisement

Advertisement

போட்டியில் பதக்கம் வென்றோருக்கு பரிசு வழங்கும் விழா புதுச்சேரியில் உள்ள தனியாா் ஹோட்டலில் புதன்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி கூடுதல் ஆட்சியா் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞா் விவகார இயக்குநா் டி. சுதாகா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சச்சித் குணசீலனுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கினாா். நிகழ்வில் புதுச்சேரி மாநில ஷூட்டிங் சங்க தலைவா் டி. கோவிந்தராஜன், செயலாளா் பி.ஜி. கிஷோா்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தங்கப்பதக்கம் வென்று காரைக்கால் திரும்பிய மாணவருக்கு, ஆசிரியா்கள், விளையாட்டு ஆா்வலா்கள், பல்வேறு அமைப்பினா் வாழ்த்து, பாராட்டு தெரிவித்தனா்.