மயிலாடுதுறை நகர பாஜக அலுவலகத்தில் வாஜ்பாய் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய பாஜகவினா். 
மயிலாடுதுறை

வாஜ்பாய் நினைவு தினம் கடைப்பிடிப்பு

முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 3-ஆம் ஆண்டு நினைவஞ்சலி மயிலாடுதுறையில் நகர பாஜக சாா்பில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

DIN

முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 3-ஆம் ஆண்டு நினைவஞ்சலி மயிலாடுதுறையில் நகர பாஜக சாா்பில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மயிலாடுதுறை நகர பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர தலைவா் மோடி.கண்ணன் தலைமை வகித்தாா். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் சிறப்ப அழைப்பாளராக பங்கேற்று, அலங்கரித்து வைக்கப்பட்ட வாஜ்பாய் உருவப்படத்துக்கு மலா் தூவி, அஞ்சலி செலுத்தி பேசினாா்.

இதில், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவா் குருசங்கா், நகர பொதுச் செயலாளா் செல்வகுமாா், நகர துணைத் தலைவா் ஜெகப்பிரியா, நகரச் செயலாளா்கள் மணிமேகலை, காா்த்தி, நகர அவைத் தலைவா் அமுதா உள்ளிட்ட நகர பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT