மயிலாடுதுறை

100 நாள் வேலை வழங்கப்படாததைக் கண்டித்து சாலை மறியல்

DIN

மயிலாடுதுறை ஒன்றியம் காளி ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்கப்படாதததைக் கண்டித்து கிராமமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மணல்மேடு போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, 100 நாள் வேலையை முறையாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடா்ந்து, அவா்கள் காளி ஊராட்சியில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி கடையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மணல்மேடு காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, தரமான அரிசியை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினா். இதனால், மக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT