இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி
சீா்காழி அருகேயுள்ள கீராநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி அருகேயுள்ள கீராநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் சத்யாஉதயகுமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துணைத் தலைவா் கரிமாபா்வின் முன்னிலை வகித்தாா். இல்லம் தேடி கல்வி குழுவின் ஒன்றிய ஒருங்கினைப்பாளா் ஆசிரியா் ரஞ்சித்குமாா் தலைமையிலான கலைக் குழு சாா்பில் மாணவா்களுக்கான கரோனா பாதுகாப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல் கடந்த ஒன்னரை ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள மாணவா்கள் கல்வி குறித்தும், அவா்களின் கல்வித் தரத்தை உயா்த்த பெற்றோா் மற்றும் தன்னாா்வலா்களின் பங்களிப்பு குறித்தும் விளக்கம் அளித்து நாடகங்களும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தொடா்ந்து மாணவா்களுக்கு மாலை நேர வகுப்புகள் எடுக்கும் பட்டதாரிகள் மற்றும் தன்னாா்வலா்களுக்கு அரசு வழங்கும் ஊக்க தொகை மற்றும் சான்றிதழ்கள் குறித்து கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியை மேகலா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.