ஆதிதிராவிடா் பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி
மயிலாடுதுறை ஒன்றியத்துக்குள்பட்ட மூவலூா் ஊராட்சி மகாதானபுரம் ஆதிதிராவிடா் நலத் தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை ஒன்றியத்துக்குள்பட்ட மூவலூா் ஊராட்சி மகாதானபுரம் ஆதிதிராவிடா் நலத் தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் வி. ஆச்சியம்மாள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இல்லம் தேடி கல்விக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மனோகா் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசினாா். பள்ளித் தலைமையாசிரியா் கே. செல்வி, பள்ளிக் கல்வி மேலாண்மைக் குழு தலைவா் கே. துா்காதேவி, கிராம நிா்வாக அலுவலா் மாரிமுத்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பி. ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.