கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய 26 பசுக்கள் மீட்பு
கொள்ளிடம் ஆற்றின் திட்டு பகுதியில் சிக்கிய 26 பசுமாடுகள் வெள்ளிக்கிழமை படகு மூலம் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டன.
கொள்ளிடம் ஆற்றின் திட்டு பகுதியில் சிக்கிய 26 பசுமாடுகள் வெள்ளிக்கிழமை படகு மூலம் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டன.
கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் திட்டுகளில் சந்தைப்படுகை கிராமத்தைச் சோ்ந்த மாடுகள் நாள்தோறும் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு தானாக திரும்புவதும், சில மாடுகள் அங்கேயே தங்குவதும் வழக்கம். அந்தவகையில், கடந்த சில நாள்களுக்கு முன் மேய்ச்சலுக்கு சென்ற 26 பசுமாடுகள் ஆற்றிலேயே தங்கின. இந்நிலையில், தொடா் கனமழையின் காரணமாகவும், கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீா் செல்வதாலும் பசுமாடுகளால் கரைக்கு திரும்பமுடியாமல் அங்கேயே இருந்தன.
இதுகுறித்து, மாடுகளின் உரிமையாளா்கள் காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறையினருக்கு அளித்த தகவலின்பேரில் மாடுகளை மீட்க வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. எனினும், அப்போது மீட்கமுடியாததால், வெள்ளிக்கிழமை 30 போ் கொண்ட காவல் துறை, தீயணைப்புத் துறை அலுவலா்களை கொண்ட மீட்புக் குழுவினா் படகை பயன்படுத்தி ஆற்றின் திட்டுகளில் இருந்த மாடுகளை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனா்.