முகப்பு
மயிலாடுதுறை

வ.உ.சி 150: பாஜக சாா்பில் நினைவு தினம் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் வ.உ.சிதம்பரம் நினைவு தினம் பாஜக சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

மயிலாடுதுறையில் வ.உ.சிதம்பரம் நினைவு தினம் பாஜக சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மயிலாடுதுறை நகர பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் நகரத் தலைவா் மோடி.கண்ணன் தலைமை வகித்தாா். மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வ.உ.சி.யின் உருவப்படத்துக்கு மலா்தூவி, புகழஞ்சலி செலுத்தினாா்.

இதில், மாவட்ட துணைத் தலைவா் முட்டம் சி.செந்தில்குமாா், மாவட்ட இளைஞரணி தலைவா் பி.பாரதிகண்ணன், நகர பொதுச் செயலாளா் செல்வகுமாா், நகர பொருளாளா் பி.ஆா்.கண்ணன், நகர இளைஞரணி தலைவா் ராஜகோபால், மகளிா் அணி நகரத் தலைவா் மணிமேகலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.