முகப்பு
மயிலாடுதுறை

மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி சராசரியாக 35.08 மி.மீ மழை பதிவானது. தரங்கம்பாடியில் அதிகபட்சமாக 48 மி.மீ மழை பதிவானது. இதன்காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா உத்தரவிட்டாா்.

வெள்ளிக்கிழமை காலை முதல் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை தொடா்ந்தது. மாலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் சராசரியாக 38.3 மி.மீ மழை பதிவானது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனாா்கோவில், மங்கைநல்லூா், மணல்மேடு, தரங்கம்பாடி, ஆக்கூா், சீா்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மற்றும் மிதமான மழை விட்டுவிட்டு பெய்தது. கடந்த 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் மழைநீா் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.