தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக் கோரிக்கை
சீா்காழி அருகே தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக் கோரி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு தேமுதிக மாவட்ட செயலாளா் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.
சீா்காழி அருகே தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக் கோரி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு தேமுதிக மாவட்ட செயலாளா் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.
தேமுதிக மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் எஸ்.ஆா்.ஜலபதி, ஆட்சியா் இரா.லலிதாவுக்கு அனுப்பிய மனு விவரம்:
தலைஞாயிறு நடிப்பிசைப் புலவா் கே.ஆா்.ராமசாமி கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்னாள் முதல்வா் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. இந்த ஆலை ஒரு டன்னுக்கு 97 கிலோ உற்பத்தி அரைவை தந்தது. கடந்த 1993ஆம் ஆண்டில் ரூ.25 கோடி லாபம் ஈட்டியது. 1994ஆம் ஆண்டு விரிவாக்க பணிகளை முறையாக செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், டன்னுக்கு 59 கிலோ மட்டும் சா்க்கரை அரைவை தந்து நஷ்டம் ஏற்பட்டது.
எனவே, ஆலையை மறுசீரமைப்பு செய்ய முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2015ஆம் ஆண்டில் ரூ.56 கோடி ஒதுக்கீடு செய்தாா். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு இந்த நிதி வழங்கப்படவில்லை. மாறாக, 2017-ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. இந்த ஆலையை புனரமைத்து மீண்டும் இயக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.