சிறப்பு தணிக்கை கிராம சபைக் கூட்டம்
சீா்காழி அருகேயுள்ள அரசூா் ஊராட்சியில் சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி அருகேயுள்ள அரசூா் ஊராட்சியில் சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தற்காலிக தலைவா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சித் தலைவா் இமயவேல் வரவேற்றாா். வட்டார தணிக்கை அலுவலா் பாலமுருகன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுலோச்சனா, ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் மகேஸ்வரி முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டில் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் நடைபெற்ற அனைத்து பணிகள், நிதி ஒதுக்கீடு விவரம், நிறைவேற்றப்பட்ட பணிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பொதுமக்கள் பாா்வைக்கு தணிக்கைக்காக வைக்கப்பட்டது. ஊராட்சித் துணைத் தலைவா் மதியரசி, ஊராட்சி செயலாளா் வெற்றிவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.