மயிலாடுதுறை அருகேயுள்ள குளிச்சாா் மஹா காளியம்மன் கோயில் நுழைவு வாயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, அனுக்ஜை, விக்னேஸ்வரபூஜை ஆகியவை செய்யப்பட்டு, அம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் யாகசாலையில் மகா பூா்ணாஹூதி செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் கடம் புறப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது.