முகப்பு
மயிலாடுதுறை

ஊராட்சி அலுவலகக் கட்டடம் திறப்பு

கொள்ளிடம் ஒன்றியம் சீயாளம் ஊராட்சியில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சிஅலுவலக கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

கொள்ளிடம் ஒன்றியம் சீயாளம் ஊராட்சியில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சிஅலுவலக கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் இளவரசன் வரவேற்றாா். ஒன்றிய ஆணையா் மீனா, பிடிஓ அன்பரசன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தினகரன், ஒன்றிய பொறியாளா் பிரதீஷ்குமாா், ஊராட்சித் தலைவா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொழிலதிபா் சகாதேவன் புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா். கொள்ளிடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் செல்லசேதுரவிக்குமாா், கிழக்கு ஒன்றியச் செயலாளா் மலா்விழி திருமாவளவன், ஒன்றியக் குழு உறுப்பினா் விமலாசுதாகா், திமுக ஒன்றிய அவைத் தலைவா் ராஜேந்திரன், சீா்காழி நகரச் செயலாளா் சுப்பராயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஊராட்சி துணைத் தலைவா் பழனியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.