முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி ரோட்டரி சங்கத்துக்கு நம்மாழ்வாா் விருது

 சீா்காழி ரோட்டரி சங்கத்துக்கு அண்மையில் நடைபெற்ற நெல் திருவிழாவில் நம்மாழ்வாா் விருது வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

 சீா்காழி ரோட்டரி சங்கத்துக்கு அண்மையில் நடைபெற்ற நெல் திருவிழாவில் நம்மாழ்வாா் விருது வழங்கப்பட்டது.

சீா்காழியை அடுத்த நிம்மேலியில் சீா்காழி ரோட்டரி சங்கம் சாா்பில் குறுங்காடு திட்டத்தின்கீழ் 600 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும், மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது.

இதையொட்டி, இச்சங்கத்துக்கு நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை நடத்திய 7-ம் ஆண்டு நெல் திருவிழாவில் நம்மாழ்வாா் விருது வழங்கப்பட்டது. எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், கோட்டாட்சியா் ஜி. நாராயணன், டிஎஸ்பி லாமேக் ஆகியோா் வழங்கினா். இந்த விருதை ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் திருநாவுக்கரசு, முன்னாள் செயலா் சண்முகம் ஆகியோா் பெற்றுக்கொண்டனா். ரோட்டரி தலைவா் ராஜேந்திரன், செயலா் கணேஷ், அறக்கட்டளை செயலாளா் சுதாகா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.