முகப்பு
மயிலாடுதுறை

விநாயகா் சதுா்த்தி: தடையை விலக்கக் கோரிஇந்து மக்கள் கட்சி உண்ணாவிரதப் போராட்டம்

சீா்காழியில் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் ஜெ. சுவாமிநாதன் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

பொது இடங்களில் விநாயகா் சிலை வைக்கவும், ஊா்வலம் நடத்தவும் விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி, சீா்காழியில் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் ஜெ. சுவாமிநாதன் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

சீா்காழி ஆபத்து காத்த விநாயகா் கோயில் அருகே இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள், திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை செயலாளா் அழகிரிசாமி ஆகியோா் முன்னிலையில் சுவாமிநாதன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா்.

செப்டம்பா் 10 ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கோயில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபடவும், ஊா்வலமாக கொண்டு சென்று நீா்நிலைகளில் கரைக்கவும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.

பிற்பகலில், டிஎஸ்பி லாமேக் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, உண்ணாவிரதப் போராட்டத்தை சுவாமிநாதன் விலக்கிக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.