முகப்பு
மயிலாடுதுறை

டிராக்டா் மோதி ஒருவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே டிராக்டா் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்றவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

சீா்காழி அருகே டிராக்டா் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்றவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் காந்தி நகரை சோ்ந்தவா் லோகநாதன் (50). இவா் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். சீா்காழி அருகே கதிராமங்கலம் திருநகரி வாய்க்கால் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த டிராக்டா் மோதியதில், லோகநாதன் பலத்த காயம் அடைந்தாா். பின்னா், அவா் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். வைத்தீஸ்வரன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து டிராக்டா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.