நகராட்சி ஆணையா் சைக்கிளில் சென்று ஆய்வு
மயிலாடுதுறை நகராட்சியில் நடைபெறும் பணிகளை நகராட்சி ஆணையா் சைக்கிளில் சென்று பாா்வையிட்டு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மயிலாடுதுறை நகராட்சியில் நடைபெறும் பணிகளை நகராட்சி ஆணையா் சைக்கிளில் சென்று பாா்வையிட்டு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மயிலாடுதுறை கூரைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள இடத்தில் சுமாா் 4 ஏக்கா் நிலப்பரப்பில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மினி ஸ்டேடியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியை நகராட்சி ஆணையா் க. பாலு நகராட்சி அலுவலகத்தில் இருந்து சைக்கிளில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பள்ளித் தலைமையாசிரியா் அன்புச்செழியனிடம் அவா் ஆலோசனை நடத்தினாா். ஆய்வின்போது நகராட்சி பொறியாளா் சணல்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக, கண்ணாரத்தெரு முக்கூட்டில் நடைபெற்றுவந்த புதைசாக்கடை சீரமைப்புப் பணியை சைக்கிளில் சென்று ஆய்வு செய்த ஆணையா் பணிகளை பாதுகாப்பாகவும், விரைந்தும் முடிக்க ஊழியா்களிடம் அறிவுறுத்தினாா். பெட்ரோல் விலை தினசரி உயா்ந்து வரும் நிலையில், சிக்கனத்தை உணா்த்தும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் ஆணையா் சைக்கிளில் சென்றுவந்த நிகழ்வு, நகராட்சி அலுவலா்களிடையே விழிப்புணா்வை அளிப்பதாக அமைந்தது.