அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
மயிலாடுதுறை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனா்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனா்.
மாவட்டத்தில் புதன்கிழமை இரவு 8 மணியிலிருந்து 11 மணிக்குள் 3 முறை விட்டுவிட்டு மின்நிறுத்தம் செய்யப்பட்டது. மத்திய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட மின்னழுத்த வேறுபாட்டின் காரணமாக இந்த மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா்.