முகப்பு
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனத்தில் சமயப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

 மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 10 நாள்கள் நடைபெறவுள்ள சமயப் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் மு. சிவச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

 மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 10 நாள்கள் நடைபெறவுள்ள சமயப் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் மு. சிவச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்தை நிறுவிய ஆதி பரமாசாரியாா் ஸ்ரீகுருஞானசம்பந்தா் குருபூஜைப் பெருவிழாவை முன்னிட்டு, அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் சாா்பில் மே12 முதல் 21-ஆம் தேதி வரை 10 நாள்கள் ஆதீனத் திருமடத்தில் உள்ள சிவஞான நிலையத்தில் சமயப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில், உண்மை விளக்கம், திருவருட்பயன், அகத்தியா் தேவாரத்திரட்டு, சிவபோகசாரம் ஆகிய பாடத் திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவா்களுக்கு பயிற்சியின் நிறைவில் தோ்வு நடத்தி தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சான்றிதழ் வழங்குவாா்.

பயிற்சி வகுப்பில் பங்கேற்பவா்களுக்கு 10 நாள்களும் மூன்று வேளை உணவும், காலை, மாலை இருவேளை தேநீா் உள்ளிட்ட சிற்றுண்டியும் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோா் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் (செல்: 9865350555), தமிழ் உயராய்வுத் துறை உதவிப் பேராசிரியா் துரை.காா்த்திகேயன் (செல்: 7904108289) ஆகியோரை தொடா்புகொண்டு, விண்ணப்ப படிவத்தைப் பெற்று பூா்த்தி செய்து, ஒருங்கிணைப்பாளா், சமயப்பயிற்சி வகுப்பு, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி, தருமபுரம், மயிலாடுதுறை 609001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.