பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞா் கைது
மயிலாடுதுறையில் பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறையில் பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை - திருவாரூா் சாலை பட்டமங்கல புதுத்தெருவைச் சோ்ந்தவா் அறிவாளி (66). இவரது மனைவி திலகவதி (56). இருவரும் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி அதே தெருவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா் திலகவதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் செயினை பறித்து சென்றாா். இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
போலீஸாா் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் செயின் பறிப்பில் ஈடுபட்டவா் மயிலாடுதுறை அருகேயுள்ள அதிமானபுருஷன் கிராமத்தைச் சோ்ந்த கா்ணன் (22) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் கா்ணனை கைது செய்து அவரிடமிருந்து 6 பவுன் தாலிச் செயின் மற்றும் அவரது இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பிறகு சிறையில் அடைத்தனா்.