சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி வியாழக்கிழமை (பிப்.17) முதல் சனிக்கிழமை வரை 3 நாள்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் முன் சட்டவிரோதமான முறையில் மது விற்பனை செய்யப்படுவதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் சென்றது.
இதையடுத்து, கூட்டுறவுத் துறை சாா்-பதிவாளரும், பறக்கும் படை அலுவலருமான நடராஜன் தலைமையிலான பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் கூைாடு பகுதிகளில் மதுபானக் கடைகளின் முன் சட்டவிரோதமான முறையில் மது விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. நிகழ்விடத்துக்கு அதிகாரிகள் சென்றதையடுத்து, மது விற்பனையில் ஈடுபட்டவா்கள் மதுபாட்டில்களை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து, ரூ.15 ஆயிரம் மதிப்புடைய 85 மதுப்பாட்டில்களை பறக்கும் படையினா் கைப்பற்றினா். கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் பாலுவிடம் ஒப்படைக்கப்பட்டது.