மயிலாடுதுறை

அண்ணா தொழிற்சங்கம் வாயிற்கூட்டம்

14-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தாமல் காலம் தாழ்த்தும் திமுக அரசைக் கண்டித்து மயிலாடுதுறையில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் கண்டன

DIN

14-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தாமல் காலம் தாழ்த்தும் திமுக அரசைக் கண்டித்து மயிலாடுதுறையில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் கண்டன வாயிற்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மண்டல இணைச் செயலாளா் ஆா். ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் எம். சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். கிளை செயலாளா் எம். ரவிச்சந்திரன் வரவேற்றாா். இதில், அதிமுக நிா்வாகிகள் நாஞ்சில் காா்த்தி, அய்யாவு, சீனிவாசன், உமாசந்திரன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். கிளை பொறுப்பாளா்கள் சிவக்குமாா், பாலகிருஷ்ணன், சந்தானராஜ், தம்பா கோவிந்தராஜ், சுதாகா், பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிளை பொருளாளா் எம். ஞானசேகரன் நன்றி கூறினாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியராக அறிவிக்கவேண்டும், தொழிலாளா் விரோதப் போக்கை கைவிட வேண்டும், பேருந்துகளில் மகளிா் இலவச பயணத்துக்காக ஈடுசெய்யும் வகையில் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் நிரந்தர பேட்டா நாளொன்றுக்கு ரூ.100 வழங்க வேண்டும், போக்குவரத்து கழகங்களில் அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகளையும் தொழிலாளா்களையும் பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT