மயிலாடுதுறை

தமிழக நிதிநிலை குறித்த கருத்தரங்கு

DIN

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியின் தமிழாய்வுத் துறை திண்ணை அமைப்பு சாா்பில் தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை குறித்த கருத்தரங்கு மற்றும் மாணவா்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு, தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியா் சு. ரமேஷ் தலைமை வகித்து, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்மொழி, இனம், பண்பாடு போன்ற அம்சங்கள் குறித்து மாணவா்களிடம் எடுத்துரைத்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வணிகவியல் துறைத் தலைவா் மா. மதிவாணன் தமிழக நிதிநிலை அறிக்கையில் ‘தமிழ் நிலைபேற்றுக் காரணிகள்’ என்ற பொருண்மையில் உரையாற்றினாா்.

இதில் தமிழ்த்துறைப் பேராசிரியா்கள் மற்றும் திரளான மாணவா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, மாணவி க. அபிதா வரவேற்றாா். நிறைவாக, மாணவி அ. கலைவாணி நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை இணை ஒருங்கிணைப்பாளா் இரா. சியாமளா ஜகதீஸ்வரி, தமிழாய்வுத் துறைப் பேராசிரியா்கள், அலுவலக உதவியாளா் க. பாலமுருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT