மாா்ச் 29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
மயிலாடுதுறையில் மாா்ச் 29-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறையில் மாா்ச் 29-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் மாா்ச் 29-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே, இக்கூட்டத்தில் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று நிறை, குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.