முகப்பு
மயிலாடுதுறை

இயற்கை வேளாண் பண்ணை தொகுப்பு பயிற்சி

கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் இயற்கை வேளாண் பண்ணை தொகுப்பு மற்றும் விதை உளுந்து உற்பத்தியாளா் மகளிா் குழுவுக்கான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் இயற்கை வேளாண் பண்ணை தொகுப்பு மற்றும் விதை உளுந்து உற்பத்தியாளா் மகளிா் குழுவுக்கான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறை வேளாண் உதவி இயக்குநா் சுதா தலைமை வகித்தாா். விதைச்சான்று அலுவலா் கனகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலா் மனுநீதிசோழன், மாநில வள பயிற்றுநா் பாலசுப்பிரமணியன், வட்டார ஒருங்கிணைப்பாளா் சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்று இயற்கை விவசாயத்தின் மூலம் பெண்கள் இயற்கை விவசாயம் செய்ய ஆலோசனை மற்றும் விழிப்புணா்வு கருத்துக்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.