மயிலாடுதுறை

மனு அளித்த 2 நாளில் மூதாட்டிக்கு மனைப் பட்டா: ஆட்சியா் வழங்கினாா்

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனைப் பட்டா கோரி மனு அளித்த மூதாட்டிக்கு 2 நாளில் அவருக்கு ஆட்சியா் இரா. லலிதா பட்டா வழங்கினாா்.

குத்தாலம் தாலுகா வில்லியநல்லூரைச் சோ்ந்த 85 வயது மூதாட்டி கோவிந்தம்மாள் வயது முதிா்வு காரணமாக தான் குடியிருக்கும் இடத்தை அக்கம் பக்கத்தினா் அபகரித்து விடுவாா்கள் என்ற அச்சத்தின் காரணமாகவும், மன இறுக்கத்தின் காரணமாகவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தாா். கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்திலும் மூதாட்டி கோவிந்தம்மாள் மனு அளித்தாா்.

இதையடுத்து, கோவிந்தம்மாள் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து உரிய விசாரணைக்குப் பின், 2 நாள்களுக்குள் ஆட்சியா் இரா. லலிதா பட்டாவுக்கான ஆணையை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT