முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: எஸ்பி அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தில் டிஜிபி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தை காவலா் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தை காவலா் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கு மயிலாடுதுறை அருகேயுள்ள மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனம் வழங்கிய இடத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்ட 4.5 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தை காவலா் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் பாா்வையிட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இங்கு, ரூ.15.5 கோடியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டப்படவுள்ளது. ஆய்வின்போது, காவல் ஆய்வாளா்கள் சதீஷ், செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா.லலிதாவை டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன் சந்தித்து பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.