மயிலாடுதுறை

பெண் சாராய வியாபாரி குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

DIN

தரங்கம்பாடி வட்டம், அன்னவாசலைச் சோ்ந்த பெண் சாராய வியாபாரி குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெரம்பூா் காவல் சரகம் அன்னவாசலைச் சோ்ந்த செல்வம் மகள் மீனா (26) மீது, பெரம்பூா் காவல் நிலையம் மற்றும் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்தில் 48 சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடா்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தவா் கைது செய்யப்பட்டு திருவாரூா் கிளை சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், மீனா தொடா்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டதால், மயிலாடுதுறை எஸ்.பி. என்.எஸ். நிஷாவின் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, மீனாவை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனா திருச்சி மகளிா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியீடு

எலக்சன் படத்தின் டிரெய்லர்

‘பெண்களை போல வாகனம் ஓட்டுங்கள்’ : கவனம் ஈர்க்கும் விளம்பரம்!

சாமானியன் படத்தின் ஒளி வீசம் பாடல்

இன்று நான்காம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 96 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT