முகப்பு
மயிலாடுதுறை

பூம்புகார் பகுதியில் மழை: விவசாயிகள் கவலை

பூம்புகார், திருவெண்காடு ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:22 AM
பூம்புகார் பகுதியில் மழை பெய்து வருகிறது.
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார், திருவெண்காடு ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 

இந்த மழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது சம்பா சாகுபடி நெல் பயிர்களை அறுவடை செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

தற்போது மழை திடீரென பெய்து வரும் நிலையில் அறுவடைப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் மழையால் நெல்மணிகள் முளைத்து விடும். மழையால் பயிர்கள் சாய்ந்ததால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. 

ஏற்கனவே கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களில் விவசாயிகள் இரசாயன உரங்களை தெளித்ததால் தற்போது பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இந்த மழையால் முற்றிலும் அறுவடைப் பணிகள் பாதிப்படையும். இவ்வாறு அவர்கள் கவலை தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.