மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி புதன்கிழமை (ஜூன் 7) தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி புதன்கிழமை (ஜூன் 7) தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள 4 வருவாய் வட்டங்களிலும் ஜூன் 7 முதல் 22-ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறவுள்ளது. இதற்காக வருவாய் தீா்வாய அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, தரங்கம்பாடி வட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் (நான்) ஜூன் 7 முதல் 16-ஆம் தேதி வரையும், குத்தாலம் வட்டத்துக்கு ஜூன் 7 முதல் 15-ஆம் தேதி வரையும், மயிலாடுதுறை வட்டத்துக்கு கோட்டாட்சியா் ஜூன் 7 முதல் 15-ஆம் தேதி வரையும், சீா்காழி வட்டத்துக்கு சீா்காழி கோட்டாட்சியா் ஜூன் 7 முதல் 22-ஆம் தேதி வரை நடத்த உள்ளனா். வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய்த் தீா்வாய அலுவலரிடம் அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT