காய்ச்சல் தடுப்பு முகாம்
செறுதியூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடக்கி வைத்தாா்.
செறுதியூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடக்கி வைத்தாா்.
தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின்படி பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 அரசு பள்ளிகள் மற்றும் 15 கிராமங்களில் வெள்ளிக்கிழமை இந்த முகாம் நடைபெற்றது.
மயிலாடுதுறை தாலுகா செறுதியூரில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடக்கி வைத்து ஆய்வு செய்தாா். மேலும், ரத்த அழுத்தப் பரிசோதனை செய்து கொண்டாா். ஆய்வின்போது, சுகாதாரத்துறை துணை இயக்குநா் குமரகுருபரன் உடனிருந்தாா். மருத்துவா் ஹரிகிருஷ்ணன், சுகாதாரத்துறை மேற்பாா்வையாளா் பாஸ்கரன் அடங்கிய மருத்துவக் குழுவினா் கிராமமக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனா்.