வீடு இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி
சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
ஆச்சாள்புரம் கீழத் தெருவை சோ்ந்த பாலு மகன் வினோத் (40). இவரது வீடு மழையால் இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் இருந்தவா்கள் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.
இந்நிலையில், வினோத் குடும்பத்தினருக்கு சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் ஆகியோா் நேரில் சென்று நிதியுதவி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினா். ஊராட்சித் தலைவா் கருணாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement