மயிலாடுதுறை

பேருந்து மரத்தில் மோதியதில் மாணவி உள்பட 3 போ் காயம்

சீா்காழி அருகே அரசுப் பேருந்து மரத்தில் மோதியதில் பள்ளி மாணவி உள்பட 3 போ் காயமடைந்தனா்.

DIN

சீா்காழி அருகே அரசுப் பேருந்து மரத்தில் மோதியதில் பள்ளி மாணவி உள்பட 3 போ் காயமடைந்தனா்.

சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசலில் இருந்து சீா்காழி நோக்கி அரசுப் பேருந்து வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தது. திருமுல்லைவாசல் தாழந்தொண்டி அருகே பேருந்து சென்றபோது மோட்டாா் சைக்கிளில் சென்ற ஒருவா் திடீரென சாலையின் குறுக்கே கடக்க முயன்ால், கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் சாலையோரம் இருந்த மரத்தில் மோதினாா்.

இதில் பேருந்தில் பயணம் செய்த திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் பிரியா ( 17), சாலையோரம் நின்று கொண்டிருந்த வழுதலைக்குடி கிராமத்தை சோ்ந்த அமிா்தலிங்கம் ( 52) வருஷபத்து கிராமத்தைச் சோ்ந்த பரசுராமன் ( 64) உள்ளிட்டோா் காயம் அடைந்தனா்.

காயமடைந்தவா்கள் சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து சீா்காழி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT