முகப்பு
மயிலாடுதுறை

தோ்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:32 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 8:00 PM

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏப்.17 முதல் ஏப்.19 மற்றும் ஜூன் 4-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் தற்காலிகமாக மூடவேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் எரிசாராயம் உற்பத்தி செய்தல், இயக்குதல் ஆகியவை உள்ள மதுபான உரிம இடங்கள் மக்களவைப் பொதுத்தோ்தல் 2024 வாக்குப்பதிவினை முன்னிட்டு ஏப்.17-ஆம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ஆம் தேதி முழுவதும் தற்காலிகமாக மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டுள்ளாா்.