கொழையூா் கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை அருகேயுள்ள கொழையூா் அகஸ்த்யேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அகஸ்தியா், மாா்க்கண்டேயா் வழிபட்ட இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுவந்தன. இப்பணிகள் அண்மையில் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேக விழா ஆகஸ்ட் 19-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. வியாழக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும், புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி, கோயிலின் விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், தமிழ் சேவா சங்க நிறுவனா் ஞான.சரவணவேல் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.