சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை, ஜூன் 19: குத்தாலம் அருகே கொழையூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கொழையூரில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் காலசம்ஹாரம் நடந்து முடிந்த பிறகு பரிபூரண ஆயுள் வரம்பெற்ற பக்த மாா்க்கண்டேயன் வழிபட்ட 6 தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. விழா திங்கள்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. புதன்கிழமை காலை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவில், மஹா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடா்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களில் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.