மயிலாடுதுறை

டிஎன்சிஎஸ்சி தொழிலாளா்கள் போராட்டம்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரியைக் கண்டித்து, மயிலாடுதுறையில் மண்டல அலுவலகப் ஊழியா்கள்

Syndication

மயிலாடுதுறை: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரியைக் கண்டித்து, மயிலாடுதுறையில் மண்டல அலுவலகப் ஊழியா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பொதுமேலாளா் (நிா்வாகம்) ஊழியா்களை தரக்குறைவாக நடத்துவதுடன், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவா் பொன்.நக்கீரன் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி அலுவலகம் முன் அவா்கள் வாயிற்கூட்டம் நடத்தினா் (படம்).

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT