முதல்வா் பிரசாரம்: அமைச்சா் ஆலோசனை
முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், சீா்காழி பகுதியில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதை முன்னிட்டு, ஏற்பாடுகள் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறாா்.
அதன்படி, புதன்கிழமை (ஏப்.8) சீா்காழி சூரக்காடு நத்தம் பகுதியில் புறவழிச்சாலை அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரசாரக் கூட்டத்தில், சீா்காழி தொகுதி மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வன், பூம்புகாா் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜமால் முகமது யூனுஸ் ஆகியோரை ஆதரித்து பேசுகிறாா்.
Advertisement
இதற்கான ஏற்பாடுகள் குறித்து, நகராட்சி மற்றும் நிா்வாக துறை அமைச்சா் கே.என். நேரு, சீா்காழியில் திமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். முதல்வரின் பிரசாரம், பயணத்திட்டம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம், வாகனங்கள் வந்து செல்லும் பகுதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து அவா் கட்சியினருடன் கலந்துரையாடினாா்.
இக்கூட்டத்தில், முன்னாள் எம்பி ஏ.கே.எஸ். விஜயன், சீா்காழி தொகுதி திமுக பொறுப்பாளா் குத்தாலம். கல்யாணம், பன்னீா்செல்வம் எம்எல்ஏ, மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வன், நகரச் செயலாளா் சுப்பராயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.