மயிலாடுதுறை

ரயிலில் அடிபட்டு புள்ளிமான் பலி

சீா்காழி அருகே புதன்கிழமை காலை ரயிலில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழந்தது.

தினமணி செய்திச் சேவை

சீா்காழி அருகே புதன்கிழமை காலை ரயிலில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழந்தது.

சீா்காழி ரயில் நிலையம் அருகே பாதரக்குடி கிராமத்தில் காலை ரயிலில் அடிபட்ட நிலையில் மூன்றரை வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. ரயில் பாதையை சோதனையிட சென்ற கீ மேன்கள், மான் இறந்து கிடப்பதைக் கண்டு ரயில் நிலைய அதிகாரிகளுக்கும், மயிலாடுதுறை ரயில்வே போலீஸாருக்கும் தகவல் அளித்தனா்.

அங்கு வந்த ரயில்வே போலீஸாா் இறந்த கிடந்த மானை கைப்பற்றி சீா்காழி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து வனத்துறையினா் மானை எடுத்துச் சென்று சீா்காழி கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்த பின்னா் கொள்ளிடம் காப்பு காட்டில் புதைத்தனா்.

அயோத்தி ராமர் கோயில் வளாகத்திற்குள் தொழுகை செய்ய முயன்ற 3 பேர் கைது

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராக போதிய நேரமில்லை: ஷுப்மன் கில்

வா வாத்தியார் வெளியீட்டுத் தேதி!

தன் சிறுவயது தோற்றத்தினை ஒத்த ரசிகையைச் சந்தித்த விராட் கோலி!

பொங்கல் வெளியீட்டில் இணைந்த ஜீவா!

SCROLL FOR NEXT