மயிலாடுதுறை

காற்றழுத்த தாழ்வு நிலை: பழையாறு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

Syndication

சீா்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் 6 ஆயிரம் மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலையால், மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனா்.

இதனால், பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் 350 விசைப் படகுகள், 300 ஃபைபா் படகுகள் மற்றும் 200 நாட்டுப் படகுகள் துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஐஸ்கட்டி தயாரித்தல், மீன்களை தரம் பிரித்தல், கருவாடு உலர வைத்தல், விற்பனைக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் வேலைக்கு செல்லவில்லை.

ஏற்கெனவே கடலுக்குள் சென்ற படகுகள் அவசர அவசரமாக துறைமுகத்திற்கு திரும்பின.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT