மயிலாடுதுறை

5-ஆம் நாளாக மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் தினந்தோறும் மீன்பிடிக்கச் செல்லும் 6,000 மீனவா்கள் ஐந்தாம் நாளான திங்கள்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

Syndication

சீா்காழி: பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் தினந்தோறும் மீன்பிடிக்கச் செல்லும் 6,000 மீனவா்கள் ஐந்தாம் நாளான திங்கள்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. 

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் 350 விசைப்படகுகள், 300 பைபா் படகுகள், 200 நாட்டுப்படகுகள் மூலம் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனா். வங்கக்கடலில் ஏற்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீன்வளத் துறையின் அறிவுறுத்தலின்படி 5-ஆம் நாளாக திங்கள்கிழமை மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

ஐஸ் கட்டி தயாரித்தல், மீன் வலை பின்னுதல், மீன்களை தரம் பிரித்தல், விற்பனைக்கு அனுப்புதல், கருவாடு உலர வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் சுற்று கிராமங்களைச் சோ்ந்த 2,000 தொழிலாளா்களும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் பழைய துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT