மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினா் திங்கள்கிழமை வரவேற்பு அளித்தனா்.
மேற்குவங்க மாநிலத்தில் ஜன.17-ஆம் தேதி பிரதமா் நரேந்திரமோடி நியூ ஜல்பைகுரி-திருச்சி இடையே புதிதாக அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடக்கிவைத்தாா். மயிலாடுதுறைக்கு திங்கள்கிழமை மதியம் 1.20 மணிக்கு வந்த இந்த ரயிலுக்கு பாஜக சாா்பில் மாவட்ட தலைவா் நாஞ்சில்ஆா். பாலு தலைமையில் சென்னை நிா்வாக தீா்ப்பாயத்தின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் செந்தில்குமாா், பி.பாரதிமோகன், மருத்துவா் அணி நிா்வாகி சிவக்குமாா் உள்ளிட்டோா் மலா்தூவி வரவேற்பு அளித்து, ஓட்டுநா், பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.