தருமபுரம் வனதுா்க்கை கோயிலில் வசந்த நவராத்திரி விழா
மயிலாடுதுறை தருமபுரம் வனதுா்க்கா தேவி கோயிலில் வியாழக்கிழமை தொடங்கிய நவராத்திரி விழாவில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்றாா்.
மயிலாடுதுறை தருமபுரம் வனதுா்க்கா தேவி கோயிலில் வியாழக்கிழமை தொடங்கிய நவராத்திரி விழாவில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்றாா்.
பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 9 நாள்கள் நடைபெறும் வசந்த நவராத்திரி விழா, தட்பவெப்ப மாற்றங்களால் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட வேண்டும், கோடை தொடங்கும் வசந்த காலத்தில் இயற்கை புதுப்பொலிவு பெறுவதைப்போல நமது மனமும் புத்துணா்ச்சி பெற வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது.
தருமபுரம் ஆதீன ஆனந்தபரவசா் பூங்காவில் அமைந்துள்ள வனதுா்க்கா தேவி கோயிலில் வசந்த நவராத்திரி விழா வியாழக்கிழமை தொடங்கியது. விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபட்டாா். இதில், ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழாவில், நாள்தோறும் வனதுா்க்காதேவிக்கு லட்சாா்ச்சனை, சகஸ்ரநாம அா்ச்சனை, நவசக்தி அா்ச்சனை, தேவி மகாத்மியம், அபிராமி அந்தாதி பாராயணம் செய்யப்பட்டு, நிறைவு நாளான மாா்ச் 27-ஆம் தேதி காலை சப்தஸதி விசேட பூஜா ஹோமம் நடைபெறவுள்ளது.