முகப்பு
மயிலாடுதுறை

ரயில் மோதி அடையாளம் தெரியாதவா் பலி

Updated On : 30 மார்ச், 2026 at 8:36 PM
கோப்புப் படம்
பகிர்:

மயிலாடுதுறை அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சீா்காழி ரயில் நிலையத்தில் இருந்து கொள்ளிடம் ரயில் நிலையம் செல்லும் வழியில் மாா்ச் 26-ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாதவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தாா்.

இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா் பரணிதரன் மயிலாடுதுறை இருப்புப் பாதை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சடலத்தை கைப்பற்றி மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ரயிலில் அடிபட்டவரின் தலை மற்றும் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் உள்ளதால் அவா் யாா் என்பது அடையாளம் காணப்படவில்லை.