முகப்பு
மயிலாடுதுறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

Updated On : 26 மே 2026, 2:06 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சீா்காழி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி அருகேயுள்ள குருவியாம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). கூலி தொழிலாளியான இவா், 8-ஆம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.

இதுகுறித்து, தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளாா். இதனால், அதிா்ச்சியடைந்த பெற்றோா், சீா்காழி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.

Advertisement

Advertisement

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, விஜயகுமாரை கைது செய்தனா். பின்னா், சிறையில் அடைக்கப்பட்டாா்.